வியாழன், 25 மார்ச், 2021

புதினா கீரையின் மருத்துவ பயன்கள்

 

Keerai - Greens Health Benefits


என்னதான் பார்த்து பார்த்து அக்கறையோடும், ஆரோக்கியத்தை கூட்டும் தேடலோடும், சரியான உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து உண்டுவந்தாலும், சில சமயங்களில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான நுண்சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை.....
இதனை மனதில் வைத்துக்கொண்டே பழங்காலம்தொட்டு பல்வேறு வகையான அற்புத மூலிகைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி வந்தனர்... அப்படி அவர்களால் காலம்காலமாக பயன்படுத்தபட்டு இன்றளவும் நம்மில் நிறைந்திருக்கும் அற்புத மூலிகையே புதினா.....

நீர்சத்து, நார்ச்சத்து, மாவுசத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புசத்து, வைட்டமின் A, நிக்கோடினிக் அமிலம், தயாமின், ரிபோபிளாவின், போன்ற பல்வேறு சத்துக்களின் பொக்கிஷமே புதினா.....
பெரும்பாலான அசைவஉணவுகளின் தயாரிப்பில் புதினாவுக்கு என்றே தனியிடம் உண்டு.....
அசைவ உணவினையும், கொழுப்புசத்து உணவுப்பொருட்களையும் எளிதில் சீரணமாக்கும் வல்லமை இதற்கு உண்டு....., 👍👍👍👍
வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், வயிற்றில் வாய்வுப்பெருக்கம், வயிற்றுஉப்புசம், செரியாமை, பசியின்மை, ருசியின்மை, வாய் நீரூறல், வாய்குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு நிலைகளில் நல்ல பலன்களை தரவல்லது.....
உணவுப்பாதையில் ஏற்படும் நோய்நிலைகளிலும், சுவாசமண்டலம் சார்ந்த நோய்த்தொற்றுகளிலும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சித்த, ஆயுர்வேத கூட்டுமருந்துகளில் புதினாவுக்கு என்றே தனிஇடம் உண்டு......
புதினா ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 3மணிநேரம் ஊறவைத்து, இந்த தண்ணீரினை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வர வயிற்றில் வாய்வு பெருக்கத்தால் ஏற்படும் வயிற்றுப்பொருமல்,வயிற்றுவலி தீரும்..... 👍👍
ஒரு கைப்பிடி புதினாவுடன், 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து 200ml தண்ணீரில் கொதிக்கவைத்து குடித்து வர பித்தத்தினால் ஏற்படும் தலைவலி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், தலைபாரம் இவற்றிக்கு நல்ல பலன் தரும்...... 👍👍👍👍👍
பித்தத்தால் ஏற்படும் பாதஎரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன், ஒரு கைப்பிடி கல்லுப்பு கூட்டி வெறும் வாணலியில் வறுத்து, பொறுத்துக்கொள்ளும் சூட்டோடு ஒரு துணியில் போட்டு முடிந்து,
பாதிக்கபட்ட இடத்தில் ஒற்றடம் கொடுத்துவர நிச்சய குணம் கிடைக்கும்...... 👌👌👌
பித்தசூடு காரணமாக சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண், தொண்டைப்புண் உண்டாகும்....
ஒரு கைப்பிடி புதினாவை 2டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, அதனோடு அரை எலுமிச்சை பழச்சாற்றினை கூட்டி குடித்துவர படிப்படியாக பாதிப்பின் தீவிரம் குறைந்து நல்ல முன்னேற்றதினை நல்கும்..... 👍👍👍👍👍👍
தலைவலி, தசைவலி, நரம்பு சார்ந்த வலி, மூட்டுகளில் வலி இருப்பின் புதினாவினை நீர்விடாமல் பச்சையாக அரைத்து பூசிவர குணம் கிடைக்கும்.....
முகப்பரு உள்ளவர்களும், வறண்டசரும பிரச்சனை உள்ளவர்களும் புதினாவின் சாற்றினை அன்றாடம் தடவிவர நல்ல மாற்றம் கிடைக்கும்......
புதினாசாறு, பூண்டுசாறு, எலுமிச்சைசாறு இவற்றினை ஒன்றாக கலந்து கூந்தலில் தடவி ஒரு அரைமணிநேரம் ஊறவைத்து குளித்துவர பொடுகு அறவே ஒழியும்.... மேலும் கூந்தலுக்கு நல்ல பளபளப்பை கொடுக்கும்.... 👌👌👌👌👌
குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களுக்கு
சில சமயங்களில், குழந்தையின் பல் படுவதால் மார்பககாம்புகளில் வெடிப்புகளும், ரணங்களும் உண்டாகும்....
புதினாவினை ஏதோ ஒரு வகையில் எடுத்துக்கொள்ள இந்த பாதிப்புகள் குறைவதாக அமெரிக்கா நாட்டில் நடைபெற்ற ஆய்வு தகவல்கள் உறுதிசெய்கிறது....... 👍👍👍👍👍
புதினாவில் இருந்து எடுக்கப்படும் புதினா எண்ணெய்யை இன்றளவும் பல்வேறு மருத்துவமுறைகளில் தலைவலி, உடல்வலி, மூட்டுவலி போன்ற நோய்நிலைகளுக்கு பயன்படும் களிம்புகளிலும், தைலங்களிலும் சேர்க்கப்படுகின்றன ...
மேலும் பல்வேறு இருமல், ஆஸ்துமா மருந்துகளிலும் சேர்க்கப்படுகின்றன...... 👌👌👌
இனியும் புதினாவினை ஒதுக்காமல் அன்றாடம் நம் உணவுகளில் கூட்டி அற்புதமான
ஆரோக்கியத்தினை மீட்டெடுப்போம்....
நோயில்லா நல்வாழ்வு வாழ்வோம்..... 🙏🙏🙏🙏🙏

Follow us in Youtube, Telegram, Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக