கபத்தினை அறுக்கும் சித்தரத்தை...

குறிப்பாக சுக்கு, மிளகு, திப்பிலி,அதிமதுரம் போன்ற மூலிகைகளை நாட்டுமருந்து கடைகளில் வாங்குவது போல அரத்தையை வாங்கும் வழக்கமும் பன்னெடுங்காலமாக இருந்துவருகிறது.... 









ஆண்டாண்டுகாலமாக நம்மிடையே வழக்கில் உள்ள பாட்டிவைத்தியத்தில் அரத்தையும்
இடம்பெற்று இருப்பதே இதன் சிறப்பினை விளக்கும்...
அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்? என்று ஒரு சொல்லாடல் உண்டு.... இதன் மூலம் கபத்தினை முழுமையாக உடலினை விட்டு நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது தெளிவாகும்...
உண்ணும் உணவுகள், குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று என இவை எல்லாவற்றிலும் நோய்க்கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு தொண்டைக்குள் நுழையும் கிருமிகளின் கொட்டத்தினை அடக்கும் வல்லமை அரத்தைக்கு உண்டு..... 







இயல்பாகவே பருவநிலை மாறுபாடு காரணமாக குழந்தைகளுக்கு இருமல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.. அவ்வாறு சளி, இருமல், ஜலதோஷம் ஏற்படும்போது சித்தரத்தையை பொடியாக்கி வயதிற்கு ஏற்றாற்போல் தேனில் குழைத்து கொடுத்துவர தொந்தரவுகள் நீங்கும் 





உடல்சூடு காரணமாக சிலருக்கு இருமல் ஏற்படும்... சித்தரத்தையை பொடித்து 1/2-1 தேக்கரண்டி அளவு எடுத்து பனங்கற்கண்டு கூட்டி கொடுத்துவர இருமல் தணியும்....
சளி,இருமல், இரைப்பு போன்ற பிணிகளுக்கு தயார் செய்யப்படும் பல்வேறு சித்த, ஆயுர்வேத கூட்டு மருந்துகளில் சிற்றரத்தைக்கு என்று தனி இடம் உண்டு....
10கிராம் அளவு சித்தரத்தையை நன்கு பொடித்து 200மிலி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து 50மிலியாக சுருக்கி வடிகட்டி 2-3 வேளைகள் குடித்துவர காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறுகள் தீரும்..... 







கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் காய்ச்சலுக்கு 10 கிராம் நிலவேம்பு இலைகளுடன், 10கிராம் சித்தரத்தையை சேர்த்து 200மிலி நீரில் கலந்து கொதிக்கவைத்து 50மிலியாக காய்ச்சி வடித்து 2-3வேளை குடித்துவர சுரம் தணியும்... சுரத்தினால் ஏற்படும் தலைவலி, உடல்வலி தீரும்.... 







சித்தரத்தையோடு அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி, மிளகு இவற்றை இளம்வறுப்பாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2 கிராம் அளவு 2-3வேளை தேனில் குழைத்து தொடர்ந்து எடுத்துக்கொண்டுவர இருமல் மற்றும்
இரைப்பு (ஆஸ்துமா ) குணமாகும்..... 





சித்தரத்தையை பொடித்து வைத்துக்கொண்டு 1தேக்கரண்டி அளவு 2டம்ளர் நீரில் ஊறவைக்கவும்... பல்துலக்கிய பின்னர் வாய்கொப்பளித்துவிட்டு பிறகு இந்த நீரை கொண்டு வாய்கொப்பளித்து வர வாய்துர்நாற்றம், வாய்வேக்காடு, சூட்டினால் ஏற்படும் வாய்ப்புண் குணமாகும்... 





வயதானவர்கள் காலை இரவு என இரண்டு வேளை மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரில் சித்தரத்தை பொடி 1 ஸ்பூன் (2கிராம் )அளவு கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவர நெஞ்சுசளி கரைந்து மலத்தில் வெளியாகி துன்பம் தீரும்..
நுரையீரலின் நுண்குழாய்களை விரிவடையச்செய்து மூச்சு எளிதாக வெளியேறவும் சித்தரத்தை உதவும்..... நீண்டநாட்களாக கோழைக்கட்டு இருப்பவர்கள் சித்தரத்தை தூளோடு சுக்குத்தூளையும் சமஅளவு கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும்....... 







பெரியவர்களுக்கு காணப்படும் காய்ச்சல், தொடர் இருமல், தீராத தலைவலி போன்று பிரச்சனைகளுக்கு சித்தரத்தை, அதிமதுரம், திப்பிலி மூன்றயும் சமஅளவு எடுத்து நீரிலிட்டு கொதிக்கவைத்து வடிகட்டி பனைவெல்லம், தேன் சேர்த்து குடித்துவர காய்ச்சல் தணியும் 





வயோதிகத்தில் ஏற்படும் மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சித்தரத்தையையும், அமுக்கிரா கிழங்கையும் நன்றாக உலர்த்தி பொடித்துவைத்துக்கொண்டு, 1/2தேக்கரண்டி அளவு காலை இரவு உணவுக்கு முன்னர் தேனில் குழைத்து 48நாட்களுக்கு சாப்பிட்டுவர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்...... 









இனியும் காலம்தாழ்த்தாமல் நம்முடைய பாரம்பரியமான மூலிகைகளை பயன்படுத்த தொடங்குவோம்.... நோயில்லா அற்புத நல்வாழ்வு வாழ்வோம்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக