Our Vision (வலைப்பதிவின் நோக்கம்)


இன்றைய காலகட்டத்தில் நம்முடைய பாரம்பரியமான பல்வேறு விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை... 

குறிப்பாக நம்முடைய வாழ்வியல் முறைகள் மற்றும் பாரம்பரியமான உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றமே இன்று பெருகிவரும் பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கிறது.... 

நோய்க்கான மருந்துகளை தேடி அலையும் பலரும் நோய்க்கான காரணங்களையும் அதற்கு இயற்கை முறையில், உணவு ரீதியான மாற்றங்கள் மூலம் தங்களை செம்மைபடுத்திக்கொள்ள முயல்வதில்லை......

ஆங்கில மருந்துகளில் ஆயிரம் ஆயிரம் பக்கவிளைவுகள், பின்விளைவுகள், எதிர்விளைவுகளை கண்டு வெம்பிபோன பலரும் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருத்துவ முறைகளை நோக்கிய பயணத்தினை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்......

அதிலும் குறிப்பாக சித்த மூலிகை மருந்துகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர் என்பது நிச்சயம் மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.....

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே சித்த மருத்துவத்தின் உயரிய கோட்பாடு......... 

இதை அடிப்படையாக கொண்டே நம்மவர்கள் உணவு சார்ந்த விஷயங்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்... 

மாறுபட்ட நம்முடைய உணவு கலாச்சாரமும், மாறுபட்ட நம்முடைய வாழ்வியல் முறைகளும், மற்றும் மாறிப்போன நம்முடைய பாரம்பரிய பழக்கவழக்கங்கள் தான் என்பதை ஆணிதரமாக உரைக்கிறது நம் சித்த மருத்துவம்.... 👍

தான் நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணம் என்பதை ஆணிதரமாக உரைக்கிறது நம் சித்த மருத்துவம்...

இதனை கருத்தில் கொண்டே நோய்க்கான காரணங்கள், 

அதற்கான உணவு ரீதியான மாற்றங்கள், சித்த மருத்துவ முறையில் பரிகாரங்கள், எளிய சித்தமருத்துவதீர்வுகளை இனி அறிந்துகொள்வோம் 🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக