ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தாளிசாதி வடகம் - சித்த மருத்துவ பயன்கள்

 

தாளிசாதி வடகம்  - சித்த மருத்துவ பயன்கள்

அறிவோம் சித்த மருந்துகளை....

கொரோனா போன்ற இந்த இக்கட்டான நோய்த்தொற்று காலங்களில், உடலின் நோய்எதிர்ப்பு வன்மையினை கூட்டிக்கொள்ள பல்வேறு விஷயங்களை செய்யத்தொடங்கிவிட்டனர்...
அதிலும் குறிப்பாக சித்த ஆயுர்வேத மூலிகை சார்ந்த தேடல்கள் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.....
உடற்பிணிகளுக்கு மட்டும் மருந்துகளை சொல்லாமல், உடலில் நோயணுகாமல் தடுக்கும் வாழ்வியல் முறைகளையும், உணவு பாரம்பரியத்தையும் போதிப்பதே நம் சித்த மருத்துவத்தின் தனிசிறப்பு.....
பன்நெடுங்காலங்களாக சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புதமான மருந்தே தாளிசாதி வடகம்...
தாளிசபத்திரி, மிளகு, செவ்வியம், திப்பிலி, திப்பிலிமூலம், சுக்கு, இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, சிறுநாகப்பூ, ஏலக்காய், குருவேர், சித்தரத்தை போன்ற பல்வேறு மூலிகைகளின் கூட்டுக்கலவையில் உருவாக்கப்பட்டதே இந்த தாளிசாதி வடகம்..... 👍👍👍👍👍
தொண்டையில் ஏற்படும் அழற்சி, தொண்டைக்கட்டு, குரற்கம்மல், கபத்தினால் ஏற்படும்
தொண்டைவலி, தொண்டையில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுபாதையில் ஏற்படும் அழற்சி, நுரையீரல் சார்ந்த தொற்றுடன் கூடிய அழற்சி, குத்திருமல், வறட்டு இருமல், கோழை கட்டிக்கொண்டு நுரையீரலை விட்டு வெளியேறமுடியாமல் ஏற்படும் மூச்சிரைப்பு, கபத்தின் காரணமாக காது மூக்கு தொண்டைபகுதிகளில் தொற்றுகளின் காரணமாக ஏற்படும் அழற்சி என்று பல்வேறு நோய்நிலைகளில் மிகச்சிறப்பான பலன்களை நல்கும் அற்புதமான பொக்கிஷம்.... 👌👌👌👌👌
மேலும் செரியாமை, பசியின்மை, ருசியின்மை, வயிற்றுஉப்புசம், போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது.....
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சித்தமருத்துவ சிகிச்சை மையங்களில் உள்ள பல்வேறு நோயாளிகளுக்கும் இந்த மாத்திரை வழங்கப்பட்டு நிச்சயமான மாற்றங்களை வழங்கிவருகிறது என்பது இன்னும் கூடுதலான மகிழ்ச்சியான செய்தி 👍👍👍👍
எல்லா சித்த ஆயுர்வேத மருந்துகடைகளிலும் கிடைக்கும் இந்த மாத்திரையை நாமும் பயன்படுத்தி வரும்பட்சத்தில்,கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்வதோடு, காலநிலை மாறுபாடு காரணமாக கபத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துகொள்ளலாம்.... 👌👌👌👌
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம், தினம் இரண்டு முதல் மூன்று வேளைகள் எடுத்துகொள்ள நல்ல பலன்களை நல்கும்..... வாயிலிட்டு சுவைத்து சாப்பிட தொண்டை சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.....
Dr.K.Rajkumar.M.D(Siddha).,
Dr.Rajkumars Siddha Clinic,
சென்னை....

Follow us in Youtube, Telegram, Facebook

1 கருத்து: