வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஆடாதோடையின் நற்குணங்களும் மருத்துவப் பயன்களும்

 

ஆடாதோடையின் நற்குணங்களை மருத்துவப் பயன்களும்

கொரோனா நோய்த்தொற்று போன்ற இந்த இக்கட்டான காலச்சூழலில், சாதாரண தொண்டைக்கட்டு , தொண்டைவலி அல்லது சாதாரண இருமல் ஏற்பட்டாலும் ஏதேதோ எண்ணங்களும், குழப்பங்களும் நமக்குள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்...... இப்படி ஏற்படும் சாதாரணமான சில அசௌகரியங்களை தீர்ப்பதில் முதன்மையாக இருப்பது நம்முடைய பாரம்பரியமான வீட்டுவைத்தியமுறைகளே....

நம் வீடுகளிலேயே உள்ள சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, இஞ்சி, கண்டங்கத்திரி, தூதுவளை,ஆடாதோடை போன்ற எண்ணற்ற மூலிகைகளை கொண்டே பரிகாரம் மேற்கொள்ளலாம்.....
அதிலும் குறிப்பாக வேலிகளில் சுயம்புவாக முளைத்து நிற்கும் அற்புதமான ஆடாதோடையின் நற்குணங்களை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.....
*ஆடாதொடையினாலே பாடாத நாவும் பாடும்*
என்கிறது சித்தமருத்துவம்.....
இதன் மூலமே கபம் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும், தொண்டைவலி, தொண்டைக்கட்டு போன்று பல்வேறு பிணிகளுக்கும் இது நல்ல தீர்வினை தரும் என்பதில் ஐயமில்லை.....
சளி, இருமல், இரைப்பிருமல் எனப்படும் இரைப்புநோய்க்கு (Bronchial Asthma) செய்யப்படும் பல்வேறு சித்த, ஆயுர்வேத மருந்துகளில் இதற்கென்று தனிஇடம் உண்டு.....
ஆடாதோடை இலையை இடித்து சாறுஎடுத்து, 10-20துளிகளை நேரடியாகவோ அல்லது சமனளவு தேன் கூட்டி கலந்துகொடுக்க இருமலும், இருமலோடு கூடிய இரைப்பும் (wheezing)., உடனடியாக தீரும்..... 👍👍👍👍👍
இரவு முழுக்க விடாமல் சிறுபிள்ளைகளை வாட்டி வதைக்கும் இருமலுக்கு, இரண்டு மூன்று ஆடாதோடை இலைகளை ஒன்றிடண்டாக நறுக்கி போட்டு, இரண்டு ஏலக்காய் போட்டு, இரண்டு குவளை வெந்நீரில் ஒரு 1மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி, 15ml-30ml வரை சிறிது சிறிதாக கஷாயத்தை கொடுத்து வர சளியானது இளகி வெளியேறி இருமலும் நிற்கும் 👍👍👍👍👍
சிலருக்கு வயிற்றுஉப்புசத்துடன் இரைப்பு (wheezing ) ஏற்படும்... கூடவே சுரமும், சளியும் இருக்கும் நிலையில்., 5 ஆடாதோடை இலைகளை ஒன்றிடண்டாக நறுக்கிப்போட்டு, 10-15மிளகு இடித்து போட்டு, ஒரு குவளை நீரில் ஊறவைத்து கொதிக்க வைத்து 30ml -60ml வரை கஷாயத்தை குடித்துவர, உப்புசமும் இரைப்பும் உடனடியாக நீங்கும்...... 👌👌👌👌👌👌👌
சளி கட்டிக்கொண்டு, குரற்கம்மலாக கரகரப்புடன் இருக்கும்போது ஆடாதோடை இலை, அதிமதுர துண்டு, நான்கு மிளகு கூட்டி கஷாயமாக வைத்து குடித்துவர தொண்டைகரகரப்பு நீங்கி, இயல்பான குரல் ஒலி மீட்டெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.... 👏👏👏👏
ஆடாதொடையில் vasicine என்னும் சத்து தான் இதனுடைய அத்தனை மகத்துவத்திற்கும் காரணமாக உள்ளது...... இந்த vasicine சத்தில் இருந்துதான் இன்றைய நவீன மருத்துவம்
mucolytic செய்கைக்காக, Bromhexine என்னும் மருந்தை பிரித்துஎடுத்து, குழந்தைகளுக்கான சளி, இருமல் மருந்தை தயாரிக்கிறது என்பது பாரம்பரியமான நம் மூலிகை மருத்துவத்திற்கு மிகவும் பெருமையான ஒரு விஷயம்..... 💪💪💪💪💪
இப்பேற்பட்ட மருத்துவகுணங்களை கொண்ட மூலிகைகளின் மகத்துவத்தினை உலகமே வியந்துபார்ப்பதோடு மட்டுமல்லாமல்,
பயன்படுத்தி வரும் இன்றைய சூழலில், இந்த மருத்துவ முறைகள் தோன்றிய இந்த புண்ணிய பூமியில் இதற்கான அங்கீகாரம் இன்றளவும் கிடைக்கவில்லை என்பதே ஒரு வருத்தமான சங்கதி...... 😥😥

Follow us in Youtube, Telegram, Facebook


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக