வயோதிகம் காரணமாக ஏற்படக்கூடிய பல்வேறு இன்னல்களில் முதன்மையானது மூட்டுவாதம் என்று சொல்லலாம்.... மூட்டுவாதத்தினை தணிப்பதற்கு எண்ணற்ற பல மூலிகைகள் இருப்பினும் அதற்கெல்லாம் தலையாயது சிற்றாமுட்டியே..... மூட்டுவாதம், முடக்குவாதம், கழுத்துவாதம், இடுப்புவாதம் போன்ற பல்வேறு வாதநோய்களுக்கு செய்யப்படும் சித்த ஆயுர்வேத கூட்டுமருந்துகளில் சிற்றாமுட்டிக்கு என்று தனிஇடம் உண்டு...... 👍👍👍👍👍👍
மூட்டுவலிக்கு மட்டுமின்றி பல்வேறு காரணங்களால் ஏற்படும் சுரங்களை போக்குவதிலும் தலைசிறந்தது...
உடலின் வெப்பத்தினை தணித்து சுரத்தினை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு....
சிற்றாமுட்டியின் வேரினை கஷாயம் செய்து சுரத்திற்கு வழங்கும் முறை இன்றும் வழக்கில் உள்ளது.....
மேலும் சிற்றாமுட்டி வேரோடு பாசிப்பருப்பு, வில்வம், பற்படாகம், கொத்தமல்லி இவற்றினை ஒன்றுகூட்டி கஷாயமிட்டு அதை அரிசிக்கஞ்சியில் கலந்துகொடுத்துவர சுரத்தின் தீவிரம் குறையும்...... 👍👍👍👍👍
துத்தி இலையோடு, சிற்றாமுட்டி இலையை கூட்டி கீரை சமைப்பது போல சமைத்துசாப்பிட ஆசனவாய் எரிச்சல், ஆசனவாய் வலி, ரத்தமூலம் குணமாகும்... மலச்சிக்கலை போக்கும்..... 👌👌👌👌
சிற்றாமுட்டி வேரோடு பனைவெல்லம் கூட்டி செய்யப்படும் கசாயத்தினால் உடல்தேறும்....உடலுக்கு ஊட்டம் தரும்....
விந்தணுக்குறைபாடு சார்ந்த பிரச்சனைகள் தீரும்....👍👍👍👍
குதிகால்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிற்றாமுட்டி வேருடன் பசுவின்பால் மற்றும் இளநீர் கொண்டு செய்யப்படும் சிற்றாமுட்டி மடக்கு தைலம் நிச்சயபலன் கொடுக்கும்.... நோய்பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த எண்ணெய்யை தடவியும் உள்ளுக்கும் சாப்பிட்டு வர நல்ல பலன் கொடுக்கும்.... வர்ம மருத்துவமுறைகளில் இன்றளவும் பயன்படுத்தப்படும் பல்வேறு தடவு எண்ணெய்களில் சிற்றாமுட்டிக்கு என்று தனியிடம் உண்டு என்பதே இதன் பெருமையை சொல்லும்... 👍👍👍👍👍
சிற்றாமுட்டி, கடுக்காய், பேராமுட்டி, நெல்லிவற்றல், சுக்கு இவற்றை தண்ணீரிலிட்டு நன்றாக கொதிக்கவைத்து மருந்தாக பருகிவர வயிற்றுப்புண், வயிற்றில் வாயுத்தொல்லை நீங்கும்.....
சிற்றாமுட்டி வேர்கசாயத்தோடு சுக்குபொடி சேர்த்து பருகிவர எலும்புகளில் ஏற்படும் பலக்குறைவினை நீக்கி, எலும்பு சார்ந்த வலிகளை குணமாக்கும்... என்புகளுக்கு வன்மை கொடுக்கும்...
குறிப்பாக 40வயதினை கடந்த பெண்களுக்கு அதிகமாக காணப்படும் Osteoporosis போன்ற பிரச்சனைகளை தடுக்கவல்லது...... 💪💪💪💪
சிறுநீரினை பெருக்கும் ஆற்றலும், வீக்கத்தினை குறைக்கும் ஆற்றலும் இருக்கும் காரணத்தினால் வயோதிகத்தினால் ஏற்படும் மூட்டுவாதத்திற்கு இந்த மூலிகையே சரியான தேர்வாக இருக்கும்... VASICINONE என்னும் சத்து இதில் உள்ளது..... கபத்தினை அறுத்து, சளியினை வெளியேற்றும் ஆற்றலோடு மூச்சுக்குழாய் இறுக்கத்தினையும் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.... இதன் காரணமாகவே ஆஸ்துமாவிற்கு இது நல்ல பலன்கொடுக்கும் என்கிறது பல்வேறு ஆய்வுமுடிவுகள்..... 👍👍👍👍
சிற்றாமுட்டிவேர்சூரணம், அமுக்குராகிழங்கு பொடி, நீர்முள்ளி விதைபொடி, சாதிக்காய் விதை பொடியோடு முருங்கைப்பிசின் கூட்டி 2கிராம் அளவு காலை இரவு என்று இரண்டுவேளை நெய்யிலோ, தேனிலோ, அல்லது பாலிலோ எடுத்துக்கொண்டு வர விந்தணுக்களின் எண்ணிக்கையை கனிசமாக கூட்டும்.... மேலும் விரைவில் விந்துவெளியேறுதல் (Premature ejaculation )., தூக்கத்தில் விந்து வெளியேறுதல் (Nocturnal emission )போன்ற பிரச்சனைகளுக்கு கைமேல் பலன்கொடுக்கும்...... 👍👍👍👍👍
இன்றளவும் பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சரபுங்க வில்வாதி லேகியம், கரிசாலை லேகியம் போன்ற சித்த மருந்துகளில் சிற்றாமுட்டியின் வேர் சேர்க்கப்படுகிறது.....
கண்ணுக்கு முன்பே இருக்கும் பல்வேறு மூலிகைகளின் மகிமைகளையும், மகத்துவங்களையும் அறிந்துகொள்ள முற்படுவோம்...
உண்மையான ஆரோக்கியமான நல்வாழ்வு வாழலாம் 🙏🙏🙏🙏🙏
Dr. K. Rajkumar. M.D(Siddha).,
சித்த மருத்துவர், சென்னை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக