வெள்ளி, 9 ஏப்ரல், 2021

அஸ்வகந்தா சூரணம் பயன்கள்

 

அஸ்வகந்தா சூரணம் பயன்கள்
நாளுக்குநாள் பெருகிவரும் கொரோனா நோய்த்தொற்று மக்களை பல்வேறுவிதங்களில் அச்சுறுத்தி வருவது அனைவரும் அறிந்தஒன்றே..... இந்த நோய்த்தொற்றிலிருந்து எப்படி தப்பித்துகொள்ள போகிறோம், எதை தின்றால் பித்தம் தெளியும், என்ற எண்ணஅலைகளோடும், குழப்பமான மனநிலையோடும், அச்சஉணர்வோடும் இருந்துவரும் மக்களின் மனங்களில் நம்பிக்கையூட்டும் வகையில் பற்பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளது............. மக்கள் தங்களை இதுபோன்ற நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, நம் அரசாங்கம் கூறும் அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவதோடு, நம் உடலின் நோய்எதிர்ப்பு வன்மையை அதிகமாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்...... நோய்எதிர்ப்பு வன்மையை கூட்ட நம் வீடுகளிளே நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளோடு சில மூலிகைகளையும் கூட்டிவரும் போது நிச்சயம் நல்ல மாற்றம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.......................... ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக நாம் பயன்படுத்திவரும் சித்த ஆயுர்வேத மருத்துவமுறைகளில் நம் உடலின் நோய்வன்மையையும், நோய்எதிர்ப்பு ஆற்றலையும் பெருக்ககூடிய வல்லமை


பொருந்திய பல்வேறு மூலிகைகள் இருக்கத்தான் செய்கிறது................. குறிப்பாக அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு, சீந்தில், அதிமதுரம், நெல்லிக்காய், நிலவேம்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்...... நோய்வந்தபிறகு மருந்துகளை வழங்கும் வழக்கத்திற்கு சற்று மாறுபட்டு, நோய்கள் வராமல் தடுத்து உடலினை பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகள் கூறும் ஒரே மருத்துவம் சித்த மருத்துவம்............ அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு மிகச்சிறப்பான காயகற்ப மூலிகை.... இதற்கு உடல்தேற்றி., உடல்உரமாக்கி, நரம்புரமாக்கி, போன்ற பல்வேறு நற்குணங்கள் உண்டு. வயோதிகம் காரணமாக ஏற்படும் உடல்சோர்வு, உடல்நடுக்கம், வயோதிகம் காரணமாக ஏற்படும் நியாபகமறதி, வயதுமூப்பின் காரணமாக ஏற்படும் உறக்கக்குறைபாடு, இவற்றை நீக்குவதோடு, ஆண்மைபலத்தை கூட்டி விந்துஉற்பத்தியை அதிகமாகக்கூடிய அற்புதமான மூலிகை...... ஏற்கனவே நம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த ஆய்வுகளில் இதன் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது..... அதிலும் குறிப்பாக உடலின் நோய்எதிர்ப்புவன்மையை அதிகமாக்கும் சக்தி இதற்கு அதிகமாக உள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது........... இந்த நோய்த்தொற்று காலங்களில் ஏற்கனவே நாம் நெல்லிக்காயை பல்வேறு வகைகளில் பயன்படுத்த தொடங்கியிருப்போம்..... அதனோடு கூட்டி அமுக்கிரா கிழங்கு சேர்ந்து மருந்துகளையும் பயன்படுத்தி இந்தநோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்வோம்.............

(அஸ்வகந்தா சூரணம் என்று கிடைக்கும்....1தேக்கரண்டி அளவு பாலில் காலை, இரவு என இரண்டுவேளை எடுத்துக்கொள்ளலாம்...... ) (அஸ்வகந்தா குடிகா என்று மாத்திரை வடிவிலும் கிடைக்கும்.... 2 மாத்திரை காலை, இரவு........) (குழந்தைகளுக்கு அஸ்வகந்தி லேகியம் என்ற வடிவில் கிடைக்கும்... 1/2 முதல் 1 தேக்கரண்டி கொடுத்துவரலாம் ).........

Dr.K.Rajkumar.M.D(Siddha).,
Dr.Rajkumars Siddha Clinic,
சென்னை....

Follow us in Youtube, Telegram, Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக