உடலினை சீராகவும், செம்மையாகவும் போஷித்து ஆரோக்கியத்திற்கு அச்சாணியாக விளங்கி, உடலினை நோய் அணுகாமல் பேணிகாக்கும் அற்புதமான மூலிகையே சீரகம்.....
பித்தநோய்கள் என்று சித்தமருத்துவம் வரையறுக்கும் பல்வேறு நோய்களுக்கெல்லாம் சீரகமே தலைசிறந்த மருந்து என்று கூறலாம்... மேலும் செரியாமை, பசியின்மை, ருசியின்மை, வயிற்றுவலி, வயிற்றுபொருமல், வயிற்றுஉப்புசம், பித்தக்கிறுகிறுப்பு, பித்தமயக்கம், வாய்க்குமட்டல், வாந்தி, உடல்எரிச்சல் என பல்வேறு நோய்களுக்கும் அற்புதமான தீர்வை தரும்..... 




விக்கலுக்கு இன்றளவும் இதுதான் மருந்து என்று வரையறுக்குமுடியாமல் தடுமாறும் நவீன மருத்துவமே பார்த்துவியக்கும் தீர்வினை தந்தவர்கள் நம் சித்தர்கள்... 8 திப்பிலியும், 10சீரகமும் பொடித்து தேனில் கலந்துண்ண தீராத விக்கல் இருந்தஇடம் காணாமல் ஓடும்.... 





சீரகத்தினை 1-2 ஸ்பூன் எடுத்து இளம்வறுப்பாக வறுத்து, கொதிக்கும் தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்கவைத்து எடுத்துக்கொள்வதே சீரகத்தண்ணீர். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுஉப்புசம், வயிற்றில் வாய்வு பெருக்கம், போன்ற இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாய் இருப்பதே இந்த சீரகத்தண்ணீர்.... 







சிலருக்கு உணவு உண்டவுடன் வயிறு மத்தளம் போல பெருத்துவீங்கி, கொடுமையான அசௌகர்யத்தை உண்டு செய்யும்...
சீரகத்தையும், ஏலக்காயையும் சமனளவு எடுத்துக்கொண்டு இளம்வறுப்பாக வறுத்து பொடித்து உணவுக்கு பின்னர், கால் தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர நிச்சய குணம் கிடைக்கும்... 









சுக்கு,மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இவற்றை சமனளவு எடுத்து, நன்கு பொடித்துகொண்டு, இதற்கு சமனளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து செய்யப்படும் மருந்தே பஞ்சதீபாக்கினி சூரணம்.. உணவில் விருப்பமே இல்லை என்று கூறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,
தகுந்த அளவு தேனில் குழைத்துண்ண, பசிதீபனத்தை உண்டாக்கி செரிமான சக்தியையும் கொடுக்கும்.... 











சீரகத்தை தனித்தனியே கரும்புச்சாறு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சிச்சாறு,
முசுமுசுக்கைசாற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்கவேண்டும். பிறகு இதனை அரைத்துக்கொள்ளவேண்டும்.. இதுவே சீரகசூரணம்.... பித்தத்தால் ஏற்படும் தலைவலி (மைக்ரேன் தலைவலி )., பித்தமயக்கம், பித்தகிறுகிறுப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை தரும்.... 









மேலும் சீரகத்தினை உணவில் கூட்டிக்கொண்டு வர, நாட்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பின்விளைவுகளில் ஒன்றான கண்புரை நோயின் தீவிரம் குறையும் என்கிறது நவீன ஆய்வுகள்... மேலும் சீரகத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் வைட்டமின் A, இவை இரண்டும் குடல்புற்றுக்கான வாய்ப்பினை குறைக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.... 







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக