நாளுக்கு நாள் கிருமிதொற்று அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில் நிச்சயம் நாம் பெருங்காயத்தை பயன்படுத்த வேண்டும். காரணம் பெருங்காயம் எல்லாவகை கிருமிகளுக்கு எதிராக போராடினாலும் வைரஸ்களுக்கு எதிராக போராடி உடலின் ஆரோக்கியத்தினை கூட்டும் என்கிறது நவீன ஆய்வுகள்....
பன்றிக்காய்ச்சலுக்கு எதிராக நல்ல பலன்களை நல்கும் என்கின்றனர் தைவானை சேர்ந்த மருத்துவஆய்வாளர்கள்....
நாளுக்கு நாள் வெப்பம் பெருகிவரும் இந்த சூழலில் கூட தினமும் நாம் பருகும் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தினை போட்டு குடித்துவந்தால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதோடு, குடலுக்கு நன்மைபயக்கும் நுண்ணுயிரியும் பெருகும் என்பதில் ஐயமில்லை.....
பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை நல்கும்...
குறிப்பாக மாதவிடாய் சரியான தருணத்தில் வராதவர்கள், மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு வராமல் இருக்கும் நிலையில் உள்ளவர்கள், PCOD என்னும் நீர்க்கட்டி உள்ள பெண்கள் பெருங்காயத்தினை அவ்வப்போது உணவில் கூட்டிக்கொண்டு வர நிச்சயம் நல்ல பலன் அளிக்கும்..... 👍👍👍👍👍👍.
குழந்தைபிறப்பிற்கு பிறகு கருப்பையில் இருந்து அழுக்கு போன்ற கசிவினை முழுவதுமாக வெளியேற்ற பெருங்காயத்தை பொரித்து, வெள்ளைப்பூண்டு மற்றும் பனைவெல்லம் சேர்த்து பிரசவித்த முதல் 5-10நாட்களுக்கு கொடுக்க நல்ல பலன்கள் கிடைக்கும்.... 👍👍👍👍👍👍
இன்றளவும் செரியாமை, வயிற்றுஉப்புசம், வாயுத்தொல்லை போன்ற பல்வேறு வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குவது பெருங்காயமே.....
உணவில் வாயுபொருட்களான பருப்புவகைகள், வாழை, உருளை, கொண்டைக்கடலை, பச்சைபட்டாணி, போன்றவற்றை சமைக்கும் போது சிறிது பெருங்காயம் சேர்த்துவர வாயுவை கண்டிக்கும்.... 👍👍👍👍
வயிற்றுஉபாதைகள் குறிப்பாக பசியின்மை, செரியாமை, வயிற்றுஉப்புசம், போன்ற பல்வேறு நோய்நிலைகளில் பெருங்காயத்தினை கூட்டுசரக்காக கொண்ட பல்வேறு மருந்துகள் சித்தமருத்துவத்தில் உள்ளது ...
சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருவேப்பிலை, இந்துப்பு இவற்றை தலா 10கிராம் எடுத்துக்கொண்டு, பெருங்காயம் இரண்டரை கிராம் எடுத்து முறையே பொடித்து வைத்துக்கொண்டு, நாம் உண்ணும் அரிசி சோற்றில் போட்டு பிசைந்து முதல் பிடியாக உருட்டி சாப்பிட்டு வர தேவையில்லாத அஜீரணம், வயிற்றுபுண்கள் மற்றும் வாயுக்கோளாறுகள் தீரும்......
புற்றுநோய்நிலைகளிலும் நல்ல பலன்களை நல்கும் என்கிறது தற்போதைய நவீன ஆய்வுமுடிவுகள்..... குறிப்பாக குடல் புற்றுநோய்கள், மார்பகபுற்று, நுரையீரல் சார்ந்த புற்றுநிலைகளில் செல்களின் அதீத வளர்ச்சியினை பாதி அளவுவரை குறைக்கிறது என்கிறது நவீன அறிவியல் உலகம்......
இனியும் நாம் பெருங்காயத்தினை ஒரு உணவுப்பொருளாக பார்க்காமல் நம் உடலின் உண்மையான ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் கேடயமாக எண்ணி அன்றாடம் நம் உணவுகளில் கூட்டிக்கொண்டு ஆரோக்கிய நல்வாழ்வினை வாழ்வோம்.... வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.....
Dr. K.Rajkumar.M.D.(Siddha medicines).,
Chrompet, Chennai-44.
9443001172..
Follow us in Youtube, Telegram, Facebook
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக