வியாழன், 8 ஏப்ரல், 2021

திரிகடுகு சூரணம் பயன்கள்

திரிகடுகு சூரணம் பயன்கள்

கொரோனா போன்ற இந்த இக்கட்டான நோய்த்தொற்று காலங்களில் உடலின் நோய்எதிர்ப்பு வன்மையை கூட்டிக்கொள்ள பலரும் பலவிதங்களில் முயன்று வருகின்றனர்....

இந்த தருணத்தில், சித்த மருத்துவத்தில் பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு, அற்புதமான பலன்களை கொடுத்துவரும் திரிகடுகு மிகச்சிறப்பான தீர்வாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.....
சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றின் சமஅளவிலான கூட்டணியே திரிகடுகு.....இன்றளவும் நாட்பட்ட அனைத்து விதமான சுரங்களில் மட்டுமல்லாமல் நாட்பட்ட இருமல்(Bronchitis), இரைப்பு என்னும் சுவாசகாசம் (Bronchial Asthma)., சுவாசப்பாதை தொடர்பான நோய்த்தொற்றுகள் (Respiratory tract infections )., காது, மூக்கு, தொண்டை தொடர்பான நோய்த்தொற்றுகள் (ENT infections) என பல்வேறு நோய்நிலைகளில் இதன் செயல்பாடு வியப்பினை உண்டாக்கும்..... 👍
சுக்கு, மிளகு தெரிந்த அளவிற்கு திப்பிலியை எவருக்கும் தெரிவதில்லை.....
சுவாசம் தொடர்பான பல்வேறு சித்த ஆயுர்வேத மருந்துகளில் என்றுமே திப்பிலிக்கு தான் முதலிடம்...
ஆஸ்துமாவில் ஏற்படும் மூச்சுஇறுக்கத்தை (Tightness of chest) குறைத்து, மூச்சுக்குழலை விரிவடையச்செய்யும் (Bronchodilator )தன்மை திப்பிலிக்கு உண்டு.. மேலும் நுரையீரலில் கட்டிக்கொண்டு வெளியே வரமறுக்கும் கெட்டிப்பட்ட சளியை கரைத்து (Mucolytic) வெளியேற்றும் தன்மையும் இதற்கு உண்டு..... 👌👌👌👌
காற்றுமாசுபாடு காரணமாக ஏற்படும் மூச்சுக்குழல் இறுக்கத்தை தடுக்கும் ஆற்றல் திப்பிலிக்கு உண்டு என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்கிறது..... 👍👍👍👍👍
திப்பிலியை இளம்வறுப்பாக வறுத்து பொடிசெய்து 2-3சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு வெற்றிலைச்சாறும், தேனும் சேர்த்துகொடுக்க இருமல் தீருவதோடு, நெஞ்சில் கட்டிக்கொண்ட கோழையும் இளகி வெளியேறும்.....
திப்பிலி பொடியோடு, கடுக்காய் பொடியும் சமஅளவு எடுத்து தேன் அல்லது தண்ணீர் சேர்த்து உருட்டி இரவில் கொடுத்துவர, கபத்தோடு காணப்படும் மலச்சிக்கல் ஓரிரு நாட்களில் சரியாகும்......
மேலும் நாட்பட்ட பூஞ்சை தொற்றுகளில் (Fungal infections ) திப்பிலி பொடியை 2 சிட்டிகை அளவு சாப்பிட்டுவர நல்ல பலன்கிடைக்கும்....
இப்போதுள்ள நிலையில் திரிகடுகு சூரணத்தினை 2 gm அளவு காலை, மாலை இருவேளை தேனிலோ அல்லது பாலிலோ கலந்து எடுத்துக்கொள்ள நோய்எதிர்பாற்றல் கூடும்.......
மேலும் திப்பிலி ரசாயனம் என்ற மருந்தினையும் நாட்பட்ட நுரையீரல் தொற்றுஉள்ளோர் எடுத்துக்கொள்ளலாம்.......
Dr. K. Rajkumar. M.D(Siddha).,
சித்த மருத்துவர்., சென்னை.

Follow us in Youtube, Telegram, Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக