வெள்ளி, 26 மார்ச், 2021

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


 

அன்றாடம் நாம் உண்ணும் உணவில், உடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளது.....

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருங்காயம் போல நம் அஞ்சறைபெட்டியில் அவசியம் காணப்படும் அற்புதமான பொருளே வெந்தயம்.....
இயல்பாகவே கசப்பு சுவையுடன் காணப்பட்டாலும், உடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் பல்வேறு மருத்துவகுணங்களை தன்னுள்ளே பொதிந்துள்ளதே இதன் தனிச்சிறப்பு.....
நாட்பட்ட தொற்றாத நோய்க்கூட்டங்களாக வர்ணிக்கப்படும் சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு, அளவுகடந்த கெட்ட கொழுப்பு, இதயநோய்கள், புற்றுநோய்கள் போன்ற பல்வேறு நோய்நிலைகளில் மிகச்சிறப்பான பலன்களை தரவல்ல அற்புதமான மூலிகையே வெந்தயம்... 👍👍
உடலுக்கு ஆற்றலையும், சக்தியையும் கொடுக்கும் இரும்புசத்துக்கு மூலாதாரமாக இருப்பதே இதன் தனித்துவம்..... பூப்பெய்திய பெண்களுக்கு இன்றளவும் வெந்தயக்களி கொடுப்பது வழக்கில் உள்ளது.... வெந்தயத்தில் உள்ள டயாஜினின் என்னும் சத்து கருப்பையினை வலுவாக்கி, ஹார்மோன்களை சீராக்கும் வல்லமை பெற்றது... மேலும் பூப்பெய்த பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தினையும் கொடுக்கவல்லது.. 👌👌👌
இன்றளவும் கூந்தல் தைலங்களில் வெந்தயத்திற்க்கு என்று தனியிடம் உண்டு.....
இது உடல்சூட்டினை குறைப்பதோடு, முடிஉதிர்வதையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது..... மேலும் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, தலையில் பூசி மீண்டும் ஊறவைத்து குளித்துவர, உடல்சூடு நன்றாக குறையும்.... கண்களில் எரிச்சல் தீரும்.....
மூளைசூடு குறையும்..... 👍👍👍👍👍
பாலூட்டும் தாய்மார்களும், வெந்தயத்தை கஞ்சியில் சேர்த்து சாப்பிட்டுவர, அவர்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு பால்சுரப்பினையும் அதிகப்படுத்தும்...... 👼👼👼👼
வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்துவைத்துக்கொண்டு, அரை தேக்கரண்டி அளவு மூன்றுவேளையும் சாப்பிட்டுவர, ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிக்கு மிகப்பெரிய மாற்றத்தினை தரும்....
இதயத்திற்கு கேட்டினை உண்டாக்கும் Triglyceride என்னும் கெட்டகொழுப்பின் அளவையும் நன்கு கண்டிக்கும்.....
இருதயஇரத்த குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு..... 👌👌👌👌
கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து என்கிற இரண்டு வகையான நார்ச்சத்துக்களுமே வெந்தயத்தில் உள்ளது....
கரையும் நார்ச்சத்து இதய ரத்தகுழாய்களில் சேரும் கொழுப்பினை குறைக்கும்....
கரையாத நார்ச்சத்து மலத்தினை இளக்கி வெளியேற்றுவதோடு, ரத்த சர்க்கரை அளவினையும் கண்டிக்கும்.....
இதன் காரணமாகவே பெரும்பாலான சர்க்கரை மற்றும் கெட்டகொழுப்பிற்கு வழங்கப்படும் மூலிகை கூட்டுக்கலவை மருந்துகளில் வெந்தயத்திற்கு என தனிஇடம் உண்டு...... 👍👍👍👍👍
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு காணப்படும் அடிவயிற்றுவலிக்கு வெந்தயம் நிச்சயமாக தீர்வு தரும்..... காரணம் இதற்கு இசிவகற்றி (Anti spasmodic) செய்கை உள்ளது.... மாதவிடாய் ஏற்படும் 5 நாட்களுக்கு முன்பாகவே வெந்தயபொடியையோ, வெந்தயகளியையோ, வெந்தயதோசையையோ, வெந்தய குழம்பையோ சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.....
கைக்கு எட்டும் தொலைவில் உள்ள நம்முடைய பாரம்பரியமான மூலிகைகளின் மகத்துவத்தினை இனியும் புறந்தள்ளாமல் பயன்படுத்த தொடங்குவோம்..... நோயில்லா ஆரோக்கிய நல்வாழ்வினை வாழ்வோம்..... 🙏🙏🙏🙏🙏

Follow us in Youtube, Telegram, Facebook



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக