வெள்ளி, 26 மார்ச், 2021

கொத்தமல்லி தழை மகிமைகள்

 நோய்எதிர்ப்பு வன்மையை கூட்டியே ஆகவேண்டும் என்ற எண்ணம்கொள்ளும் அனைவருக்கும் இறைவனால் அருளப்பட்ட அற்புதமான வரப்பிரசாதமே கொத்தமல்லி தழை........

Coriander healthy benefits

காய்கறி கடைகளில் நாம் வாங்கும் காய்கறிகளுக்கு இலவசஇணைப்பாக, கொஞ்சம் கொசுராகவே காலகாலமாகவே வழங்கப்படும் பொருளே கொத்தமல்லிதழையும், கருவேப்பிலையும்.... கொசுறாகத்தானே கிடைத்தது என்கிற நம்முடைய மனோபாவம், அதனை ஒரு சாதாரண பொருளாகவே எண்ணத்தோன்றும்....
மேலும் சமைத்த உணவுகளில் கூட, அதனை எடுத்து ஓரம் கட்டும் பழக்கமும் நம்மிடம் உள்ளது.....
இதன் மருத்துவகுணங்களை கேட்பீர்கள் என்றால் இனியும் இந்த தவறினை செய்யமாட்டோம்....
உணவில் இருந்து தட்டின் ஓரத்தில் ஒதுக்கிவைக்கும் கொத்தமல்லி தழையில் தையாமின், ரிபோபிளாவின், நியாசின்,
வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் அமிலம், போன்ற பல்வேறு கனிமச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன..... 👍👍👍👍👍
பொதுவாக உணவுப்பொருட்களின் சுவையை கூட்டவும், வாசனையை கூட்டவும் இன்றளவும் இதனை நாம் பயன்படுத்திவருகிறோம்....
இதன் காரணமாக பசியின்மை, உணவில் வெறுப்பு, ருசியின்மை, வயிற்றுபொருமல், வயிற்றில் வாய்வுபெருக்கம், வயிற்றுஉப்புசம், செரியாமை, பித்தமயக்கம், பித்தக்கிறுகிறுப்பு, பித்தவாந்தி, போன்ற பல்வேறு பிரச்னைகள்
தீரும் 👍👍👍👍👍



கொத்தமல்லியில் அதிகப்படியான இரும்புசத்து உள்ளதால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை கூட்டுவதோடு, ரத்தசோகை வராமல் தடுக்கும்...
மேலும் இதில் உள்ள அதிகப்படியான பாஸ்பரஸ் சத்தினால், எலும்புகளின் வன்மையை கூட்டும்... வயோதிகம் காரணமாக ஏற்படும் எலும்புவன்மை குறைபாட்டிற்கு இது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.... 👌👌👌👌👌
செரிமானதிற்கு உதவும் நொதிகளையும், சுரப்புகளையும் தூண்டுவது போலவே, இன்சுலின் சுரப்பினையும் தூண்டும் ஆற்றல் இதற்கு உண்டு... இதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்..... நீரழிவு நோயாளிகள் அன்றாடம் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள நிச்சய பலன் கிடைக்கும்..... 👍👍👍👍👍👍
வைட்டமின் A, வைட்டமின் C போன்ற சத்துக்களின் காரணமாக உடலின் நோய்எதிர்ப்பு திறனை கூட்டுவதோடு , கண்நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றலையும் நல்கும்....
Macular degeneration, விழிவெண்படல அழற்சி எனப்படும் Madras eye (Conjuctivitis),
Glaucoma என்னும் விழியில் ஏற்படும் அழுத்தநோய்களை தணிக்கும் ஆற்றல் கொத்தமல்லி தழைக்கு உண்டு என்கிறது நவீன ஆய்வு முடிவுகள்..... 👌👌👌👌👌
கொத்தமல்லி தழையை கஷாயமாக வைத்து காலை மாலை தொடர்ந்து பருகிவர, ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். ரத்தஅழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கும்....
மேலும் இதயநோய்களுக்கான வாய்ப்பினை குறைத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும் 👍👍👍👍
கர்ப்பிணிகளுக்கு கருத்தரித்த ஆரம்ப காலங்களில் ஏற்படும் மசக்கை வாந்திக்கு கொத்தமல்லி கஷாயம் மிகச்சிறந்த தீர்வாக அமைவதோடு, வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.... குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதித்தன்மையை மேம்படுத்தும்...... 💪💪💪💪💪💪💪💪
இனியும் கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான பொருட்களை புறம்தள்ளாமல்,தவறாமல் உணவில் எடுத்துக்கொண்டு அற்புதமான, ஆரோக்கியமான நல்வாழ்வினை தொடங்குவோம் .... 🙏🙏🙏🙏🙏

Follow us in Youtube, Telegram, Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக