கொரோனா போன்ற இந்த இக்கட்டான காலச்சூழலில், எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற எண்ணம் மக்களின் மனங்களில் மேலோங்கி உள்ளது என்பது இயல்பான ஒன்றே.....அதிலும் குறிப்பாக பக்கவிளைவுகள் இல்லாத பாரம்பரியமான மூலிகை மருந்துகளின் தேடலும் இன்னும் அதிகரித்துகொண்டே போகிறது.....


ஏற்கனவே நான் என்னுடைய முந்தைய பதிவுகளிள் மிளகு, மஞ்சள் மற்றும் துளசியை பற்றிய பல்வேறு தகவல்களை பரிமாறியுள்ளேன்.....
இன்று அதிமதுரம் என்னும் அற்புத மூலிகையின் குணங்களையும் அதன் மருத்துவப்பயன்களையும் விரிவாக பார்ப்போம்..... 



சாதாரணமாக எல்லா சித்த ஆயுர்வேத மருந்துகடைகளிலும், நாட்டுமருந்து கடைகளிலும் மிகஎளிதாக கிடைக்கும் அற்புதமான மூலிகையே அதிமதுரம்......
கபத்தினால் உண்டாகும் பலநோய்நிலைகளிலும், குறிப்பாக கபத்தினால் உண்டாகும் தீராத இருமலுக்கும், சூட்டினால் உண்டாகும் இருமலுக்கும், தயாரிக்கப்படும் பெரும்பாலான சித்த, ஆயுர்வேத கூட்டு மருந்துகளில் இதற்கென தனிஇடம் உண்டென்பதே இதன் சிறப்பினை வெளிப்படுத்தும்..... 



மேலும் சித்த மருத்துவத்தில் கண்நோய்கள், வெண்புள்ளி என்னும் Leucoderma, எலும்பினை பற்றிய பல்வேறு நோய்கள், சிறுநீர்எரிச்சல், வெப்பதினால் உருவாகும் பிணிகள், காமாலை என பல்வேறு நிலைகளில் அதிமதுரம்
பயன்படுத்தப்படுகிறது......
குறிப்பாக இந்த காலகட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் இந்த அதிமதுரம் வழங்கப்படுவதே இதன் தனிச்சிறப்பு..... மேலும் நோய்த்தொற்று தடுப்பு மருந்தாகவும் இதனை பயன்படுத்தி நாம் பயன்பெறலாம்..... 





அதிமதுர சூரணம் என்ற வடிவில் கிடைக்கபெற்றால் காலை மாலை 1தேக்கரண்டி அளவு எடுத்து பாலிலோ அல்லது தேனிலோ எடுத்துக்கொண்டு வர, நிச்சயம் நோய்எதிர்ப்புவன்மை கூடும்.....
மேலும் இதே அதிமதுரம் மாத்திரை வடிவில் கிடைக்கபெற்றால் காலை மாலை 2 எடுத்துவர உடல்பலம் பெறும்.....
மேலும் தொண்டையில் வறட்சி, தொண்டையில் கரகரப்பு, தொண்டைக்கம்மல், தொண்டையில் கபத்தினால் ஏற்படும் அசௌகரியம் போன்ற பல்வேறு நிலைகளில், வெறும் அதிமதுரத்துண்டினை (நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் )., வாயில் இட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஊறும் நீரினை விழுங்கி வர நல்லமுன்னேற்றம் கிடைக்கும்..... 







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக