புதன், 24 மார்ச், 2021

உடற்கழிவு வெளியேற்ற நுட்பங்கள்

 உடற்கழிவு வெளியேற்ற நுட்பங்கள்

Techniques  to remove toxic waste from your body




அன்பு நண்பர்களே! உடலைக் குப்பைத் தொட்டியாக வைத்துக்கொண்டு அய்யோ துர்நாற்றம் குடலைப் பிறட்டுதே! என்று சொல்லிப் பலன் இல்லை. நோய் தொற்று இல்லாமல் வாழவேண்டுமாயின், நம் உடலில் கழிவுத் தேக்கம் இல்லாமல் வாழவேண்டும். நம் உடலின் கழிவேற்ற நுட்பங்களை இனி பார்ப்போம்.
1. உண்ணா நோன்பு: உண்ணா நோன்பு இருக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். முடிந்த அளவு ஓய்வில் இருப்பது மிகவும் நல்லது. அப்படி இல்லாவிட்டால் கடுமையான வேலையைத் தவிர்க்கவும். உண்ணாவிரதம் இருக்கும்போது மனம் சலனமில்லாமல் இருக்க வேண்டும். உண்ணாவிரதத்தை பழச்சாறு அருந்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு படிப்படியாக திரவ உணவிலிருந்து திட உணவிற்கு மாற வேண்டும்.
2. பழம் மற்றும் மூலிகைச் சாறுகள்: இயற்கை வைத்தியத்தில் பழங்களின் சாறுகளான சாத்துக்கொடி, மாதுளை, அன்னாச்சி, ஆரஞ்சு, மாம்பழம் மற்றும் முலாம் பழம் ஆகியன கொண்டும் மற்றும் மூலிகைச் சாறுகளான அருகம்புல் சாறு, வெண்பூசனி, வாழைத் தண்டு சாறு, கேரட் சாறு, சோற்றுக் கற்றாழைச் சாறு மற்றும் கொத்துமல்லி சாறு ஆகியன கொண்டும் உடற்கழிவை வெளியேற்றம் செய்கிறார்கள்.
3. இயற்கை அகிம்சை எனிமா: இயற்கை மருத்துவ சிகிச்சையில் எனிமா எடுக்கும் முறையை நாம் தினமும் காலை வேளையில் எடுக்க வேண்டும். ஒரு 300 மில்லி நீர் நிறப்பிய குடுவையிலிருந்து (Tumbler) ட்யுப் (Tube) வழியே நம் ஆசன வாயில் பொறுத்தி நம் மலக்குடலில் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஐந்து அல்லது பத்து நிமிடம் சமதரையில் தளர்வாகப் படுத்துவிட்டு பின் மலம் கழிக்க வேண்டும்.
4. சத்துணவு முறை: நீரில் கரையும் நார் சத்தை இரவு தூங்கப்போகும் முன்னும், காலை எழுந்த உடனும் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். மேலும் சி-உயிர்ச் சத்து நீரில் கரைக்கூடிய கழிவுகளையும், ஈ-உயிர்ச் சத்து கொழுப்பில் கரையக்கூடிய கழிவுகளையும் வெளியேற்றும். இவைகளோடு உடலை வலுவாக்க சமச்சீர் புரதம், உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பும் எடுக்க வேண்டும்.
5. மூலிகை பேதிகள்: உடலையும் குடலையும் சுத்தப்படுத்த கடுக்காய்த் தூள் கலந்த தண்ணீரை, தினமும் இரவு தூங்கப் போகும் முன் குடிக்க வேண்டும். அதே போல், வேப்பிலை உருண்டை அல்லது கீழாநெல்லிக் கொழுந்தை காலையில் வெறும் வயிற்றில் விழுங்கினாலும் பித்தம் சுத்தம் பெறும். சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தில் பேதிக்கு தரப்படும் மருந்துகளும் நம் உடல் மற்றும் குடலை சுத்தமாக்கும்.
6. குளியல் முறைகள்: நீண்ட தொட்டியில் முதுகு மற்றும் இடுப்பு அல்லது இடுப்பு மட்டும் தண்ணீரில் மூழ்கும்படி 15 நிமிடங்கள் இருக்கலாம். கரையான் புற்று மண்ணை எடுத்து தண்ணீரில் குழைத்து உடல் முழுமையும் பூசி, அது உலரும் வரை வெய்யிலில் நின்று, பின்னர் தண்ணீரில் குளிக்கலாம். வெற்றுடம்பை வாழை இலையில் கட்டுபோட்டு சிறிது நேரம் வெய்யிலில் காய வைத்துப் பின்னர் தண்ணீரில் குளிக்கலாம்.
7. உப்பு நீர்க் கழுவல்: உப்பு கலந்த நீரை குடிக்கக் குடிக்க நம் வயிறு மற்றும் குடல் சுத்தமாகத் தொடங்கும். நாம் குடித்த உப்பு நீர் எப்படி இருக்கிறதோ அப்படியே ஆசனவாய் வழியே வரும் வரை உப்புத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பின்னர், குழையக் குழையச் வெந்த பாசிப் பருப்பு கலந்த நெய்ப் பொங்கல் சாப்பிடலாம்.
8. புலன் சுத்தி: நாக்கு மற்றும் வாய் சுத்தமாக நல்லெண்ணெயை வாயில் 15 நிமிடங்கள் கொப்பளித்து நுரைத்தவுடன் வெளியுமிழ வேண்டும். இயற்கை வைத்திய மூக்கு குவளையைக் கொண்டு ஒரு மூக்கு தூவரத்தின் வழி உப்புத் தண்ணீரை உள் செலுத்தி மறு துவாரம் வழியே சளியை வெளியேற்றலாம். கண்களை சுத்தமாக்க. கண் குவளையைக் கொண்டு இரு கண்களையும் குடிக்கும் தண்ணீரில் கழுவ வேண்டும்.
9. ஹோமியோபதி: நக்ஸ் வோமிக்கா Nux vomica), ரஸ் டாக்ஸ் (Rhus tox), நேட்ரம் முர் (Natrum mur), மற்றும் ஏபிஸ் மெல் (Apis mel) ஆகிய ஹோமியோ மருந்துகள் உடற்கழிவு மற்றும் விஷங்களை நீக்கும்.
10 . மலர் மருந்துகள்: உடல் மற்றும் தோல் சுத்தம் பெற கிராப் ஆப்பிள், இரத்தம் சுத்தமாக ராக் ரோஸ், மூளைக் குப்பை நீங்க வைட் செஸ்நட் மற்றும் வாய்வு நீங்க கிலமேட்டிஸ் பயன்படும்.
உடற் கழிவே கிருமி வளர்ப்பு களமாகும், அதனை
உடன் நீக்கி நோய் வளர்ப்பு இன்றி வாழ்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக