கொரோனா போன்ற இந்த இக்கட்டான நோய்த்தொற்று காலங்களில், எப்படி நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம், உடலின் நோய்எதிர்ப்பு வன்மையை எப்படி பெருக்கிக்கொள்ளலாம் போன்ற பல எண்ணங்கள் மக்களின் மனங்களில் மேலோங்கி காணப்படுகிறது.....
இன்றைய சூழலில் கொரோனா நோய்த்தொற்றினை தடுப்பதற்கான எந்தவிதமான தடுப்பூசிகளும் இல்லை என்பதே இன்னும் வேதனையான விஷயம்......
இருப்பினும் காலகாலமாக நம் வழக்கில் உள்ள பாரம்பரியமான அத்தனை நோய்த்தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்றிவருதலே இப்போதைக்கு இந்த நோய்த்தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி....
பன்னெடுங்காலமாக பல்வேறு விதமான நோய்த்தொற்றுகளை தடுக்க பயன்படும் மூலிகைகளில் மஞ்சளும், வேப்பிலையும் மிகச்சிறப்பானது...... இவ்விரண்டு மூலிகைகளும் பல்வேறு வழிகளில் நம் நோய்எதிர்ப்பு வன்மையை கூட்டும் என்பதில் ஐயமில்லை......
பாரம்பரியமான நம் இந்தியசமையலில் குறிப்பாக நம் தமிழர்களின் வாழ்வோடும், சமையலோடும், ஆரோக்கியத்தோடும் அற்புதமாக கலந்த ஒன்று தான் மஞ்சள்..... மஞ்சளை பல்வேறு வகைகளில் நம் உணவுகளில் கூட்டிகொள்வதே நம் நோய்எதிர்ப்பு வன்மைக்கு அச்சாரமாக விளங்கும்....
இன்றும் கூட வீட்டில் யாருக்கேனும் இருமலோ, மூக்கில் நீரொழுகுதலோ, தொண்டைகரகரப்போ, விடாத தும்மல் இருப்பின் சூடான பாலில் மஞ்சள் தூளையும், மிளகுத்தூளையும் போட்டு கொடுப்பது என்பது வழக்கில் உள்ளது.... இது உடலின் நோய்எதிர்ப்புவன்மையை கூட்டுவதோடு, நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.......
மேலும் நாட்பட்ட பீனிசம் (sinusitis ) போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த மஞ்சள்மிளகு பாலை சிலகாலங்கள் பருகிவர நல்ல பலன்கிடைக்கும்......
மேலும் சுவாசப்பாதை தொடர்பான நோய்நிலைகளில் (Respiratory tract infections)., காது மூக்கு தொண்டை சார்ந்த தொற்றுகளிலும் (ENT infections )., சூடான பாலில் மிளகுபொடி, சுக்குப்பொடி, பனங்கற்கண்டு கூட்டி காலை மாலை என இருவேளை பருகிவர கைமேல் பலன்கிடைக்கும்.......
மேலும் மஞ்சளை நாம் அன்றாடம் உணவில் கூட்டிக்கொண்டு வரும்பட்சத்தில், புற்றுகள் உருவாவதற்கான வாய்ப்பை குறைப்பதோடு, புற்றுநோய் சிகிச்சைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து அற்புதமாக நோயாளியை பாதுகாக்கும் என்கிறது பல்வேறு ஆய்வுதகவல்கள்......
வலியினையும், வேதனையையும் மட்டுமல்லாமல் வீக்கத்தையும் குறைக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கும் காரணத்தால், சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவமுறைகளில் உருவாக்கப்படும் பல்வேறு வலி நிவாரண(Pain killers ) மருந்துகளில் மஞ்சளுக்கு என்று தனியிடம் உள்ளதே இதன் சிறப்பு....
மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பினை குறைக்க(Triglycerides ), இரைப்பையில் ஏற்படும் புண்களை (Gastric ulcer) குணமாக்க என பல்வேறு வடிவங்களில் மஞ்சள் தன் மகிமையை வெளிப்படுத்தும்.....
ஆக இந்த நோய்த்தொற்று காலங்களில் மஞ்சளினை ஏதோ ஒரு வடிவில் நாம் நம் உணவுகளில் கூட்டிவர நிச்சயம் பலன்கிடைக்கும்......... 





Dr. K. Rajkumar. M.D (Siddha).,
Chennai.