சனி, 15 மே, 2021

மஞ்சளின் மருத்துவப் பயன்கள்


 கொரோனா போன்ற இந்த இக்கட்டான நோய்த்தொற்று காலங்களில், எப்படி நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம், உடலின் நோய்எதிர்ப்பு வன்மையை எப்படி பெருக்கிக்கொள்ளலாம் போன்ற பல எண்ணங்கள் மக்களின் மனங்களில் மேலோங்கி காணப்படுகிறது.....

இன்றைய சூழலில் கொரோனா நோய்த்தொற்றினை தடுப்பதற்கான எந்தவிதமான தடுப்பூசிகளும் இல்லை என்பதே இன்னும் வேதனையான விஷயம்......
இருப்பினும் காலகாலமாக நம் வழக்கில் உள்ள பாரம்பரியமான அத்தனை நோய்த்தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்றிவருதலே இப்போதைக்கு இந்த நோய்த்தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி....
பன்னெடுங்காலமாக பல்வேறு விதமான நோய்த்தொற்றுகளை தடுக்க பயன்படும் மூலிகைகளில் மஞ்சளும், வேப்பிலையும் மிகச்சிறப்பானது...... இவ்விரண்டு மூலிகைகளும் பல்வேறு வழிகளில் நம் நோய்எதிர்ப்பு வன்மையை கூட்டும் என்பதில் ஐயமில்லை......
பாரம்பரியமான நம் இந்தியசமையலில் குறிப்பாக நம் தமிழர்களின் வாழ்வோடும், சமையலோடும், ஆரோக்கியத்தோடும் அற்புதமாக கலந்த ஒன்று தான் மஞ்சள்..... மஞ்சளை பல்வேறு வகைகளில் நம் உணவுகளில் கூட்டிகொள்வதே நம் நோய்எதிர்ப்பு வன்மைக்கு அச்சாரமாக விளங்கும்....
இன்றும் கூட வீட்டில் யாருக்கேனும் இருமலோ, மூக்கில் நீரொழுகுதலோ, தொண்டைகரகரப்போ, விடாத தும்மல் இருப்பின் சூடான பாலில் மஞ்சள் தூளையும், மிளகுத்தூளையும் போட்டு கொடுப்பது என்பது வழக்கில் உள்ளது.... இது உடலின் நோய்எதிர்ப்புவன்மையை கூட்டுவதோடு, நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.......
மேலும் நாட்பட்ட பீனிசம் (sinusitis ) போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த மஞ்சள்மிளகு பாலை சிலகாலங்கள் பருகிவர நல்ல பலன்கிடைக்கும்......
மேலும் சுவாசப்பாதை தொடர்பான நோய்நிலைகளில் (Respiratory tract infections)., காது மூக்கு தொண்டை சார்ந்த தொற்றுகளிலும் (ENT infections )., சூடான பாலில் மிளகுபொடி, சுக்குப்பொடி, பனங்கற்கண்டு கூட்டி காலை மாலை என இருவேளை பருகிவர கைமேல் பலன்கிடைக்கும்.......
மேலும் மஞ்சளை நாம் அன்றாடம் உணவில் கூட்டிக்கொண்டு வரும்பட்சத்தில், புற்றுகள் உருவாவதற்கான வாய்ப்பை குறைப்பதோடு, புற்றுநோய் சிகிச்சைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து அற்புதமாக நோயாளியை பாதுகாக்கும் என்கிறது பல்வேறு ஆய்வுதகவல்கள்......
வலியினையும், வேதனையையும் மட்டுமல்லாமல் வீக்கத்தையும் குறைக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கும் காரணத்தால், சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவமுறைகளில் உருவாக்கப்படும் பல்வேறு வலி நிவாரண(Pain killers ) மருந்துகளில் மஞ்சளுக்கு என்று தனியிடம் உள்ளதே இதன் சிறப்பு....
மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பினை குறைக்க(Triglycerides ), இரைப்பையில் ஏற்படும் புண்களை (Gastric ulcer) குணமாக்க என பல்வேறு வடிவங்களில் மஞ்சள் தன் மகிமையை வெளிப்படுத்தும்.....
ஆக இந்த நோய்த்தொற்று காலங்களில் மஞ்சளினை ஏதோ ஒரு வடிவில் நாம் நம் உணவுகளில் கூட்டிவர நிச்சயம் பலன்கிடைக்கும்......... 🙏🙏🙏
Dr. K. Rajkumar. M.D (Siddha).,
Chennai.

புதன், 21 ஏப்ரல், 2021

நெல்லிக்காய் மருத்துவ பயன்கள் - மருத்துவரின் தெளிவான விளக்கங்கள்


நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என்னும் இவை அணுகாமல் பாதுகாத்து உடலினை கல் போல ஆக்கும் அற்புதம் நிறைந்த முறையையே காயகற்பம் என்கிறது சித்தமருத்துவம்.......

நோயினை நீக்கும் முறைகளை சொல்வதோடு மட்டுமல்லாமல், நோய்வராமல் தடுக்கும் நோயில்லா நெறிமுறைகளை போதிக்கும் ஒரே மருத்துவம் நம் சித்த மருத்துவமே.......
கொரோனா போன்ற இந்த இக்கட்டான நோய்த்தொற்று காலங்களில் நம் உடலின் நோய்எதிர்ப்புவன்மையை பெருக்கிக்கொள்ள கற்பிக்கப்படும் பல வழிமுறைகளில் முதலிடத்தில் இருப்பது நெல்லிக்காய்.....
நெல்லிக்காய் தானே, அதில் என்ன பிரமாதமான பலன்கள் இருக்கபோகிறது என்று கடந்துசெல்லும் நம்மில் பலருக்கும் அதன் மருத்துவக்குணங்கள் தெரிய வாய்ப்பேஇல்லை......
காசுபோட்டு கடைகடையாக ஏறிஇறங்கி தேடிபார்த்து நாம் வாங்கி உண்ணும் பல்வேறு பழங்களில் இல்லாத அளவிடமுடியாத அற்புதமான நற்பலன்கள் இந்த நெல்லிக்காயில் உள்ளது என்பதே உண்மை......
உடலின் நோய்எதிர்ப்புவன்மையை பெருக்குவதில் வைட்டமின் C க்கு மிகமுக்கிய பங்குண்டு.....
அந்த வைட்டமின் C யை நமக்கு அள்ளித்தருவதில் முதலிடத்தில் இருப்பதும் நம் நெல்லிக்காய் தான்...........
இன்றளவும் பாரம்பரியமான பல்வேறு சித்த ஆயுர்வேத மருந்துகளில் மிகமுக்கியமான,இன்றியமையாத ஒரு கூட்டுசரக்காக இது சேர்க்கப்படுவதே இதன் மருத்துவகுணத்தை வெளிப்படுத்தும்.........
நாட்பட்ட இருமல்(Bronchitis), நாட்பட்ட இரைப்பு என்றழைக்கபடும் சுவாசகாசம் (Bronchial Asthma )., இளைப்பு நோய் (pulmonary tuberculosis)., நாட்பட்ட உடல்எடை இழப்பு (Emaciation)., பீனிசம் (sinusitis) போன்ற பல்வேறு நோய்நிலைகளில் நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகள் இன்றளவும் மிகச்சிறப்பான நற்பலன்களை வழங்கிவருவதை கண்கூடாக பார்க்கலாம்.... மேலும் உடல்வன்மையை பெருக்கி நோய்எதிர்ப்பு ஆற்றலை வழங்கும் என்பதனையும் பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதிசெய்கிறது........
ஆகவே ஏதோ ஒரு வகையில் நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகளை கூட்டிக்கொண்டு வந்தாலே நிச்சயம் கொரோனா போன்ற நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.....
Dr. K. Rajkumar. Chennai.

Follow us in Youtube, Telegram, Facebook

வியாழன், 15 ஏப்ரல், 2021

தூதுவளையின் அற்புதங்கள் மற்றும் பயன்களும்

 உடலில் நோயணுகாதபடி காத்து, உடலினை பேணிப்பாதுகாக்கும் அற்புதமூலிகைகளை காயகற்ப மூலிகைகள் என்று வரையறுத்தனர் நம் சித்தர்கள்....

தூதுவளையின் அற்புதங்கள் மற்றும் பயன்களும்

தூதுவளையும் காயகற்ப மூலிகைகளில் ஒன்று என்பதே நமக்கு விந்தையான செய்தியாக தோன்றலாம்.... இது பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பரந்துவிரிந்து வளரும் தன்மை கொண்டது.... சிறிய முட்களுடன் கூடிய கொடிவகையை சார்ந்தது... பூக்களானது ஊதா நிறத்தில் பூக்கும்... வேலிகளில் அதிகம் படர்ந்து கேட்பாரற்று கிடக்கும்.... இதன் இலை, பூ, காய், வேர் என அத்தனை பாகங்களுமே பல்வேறு அற்புதமான மருத்துவகுணங்கள் கொண்டது..... 🔆🔆
சளி, இருமல் மற்றும் இரைப்பு போன்ற பல்வேறு நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும், தொற்றுகளுக்கும் மிகுந்த பலனை நல்கும்...
தூதுவளை இலைகளை பறித்து நன்கு சுத்தம் செய்து, அதனோடு மிளகு, சின்னவெங்காயம், பூண்டு, பெருங்காயம், சீரகம் கூட்டி நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (48நாட்கள் ) சாப்பிட்டுவர உடலுக்கு வன்மையை கொடுப்பதோடு சளி, இருமல், இரைப்பு (ஆஸ்துமா ) முதலியன நீங்கும் 👍👍👍👍👍
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு, 1/2 முதல் 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து, உண்டுவர
இருமல், இரைப்பு நீங்கி உடல் வன்மையடையும்.... உடலுக்கு நோய்எதிர்ப்பு வன்மையை கூட்டும் 💪💪
தூதுவளை காயை சமைத்தோ அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் உண்டுவர கண்ணில் உண்டாகும் பித்தநீர் அதிகரிப்பு குறையும் என்கிறது சித்தமருத்துவம்.... 👍👍👍👍👍
தூதுவளை பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு பாலில் கலந்து அருந்திவர உடலுக்கு வலுவினை கூட்டும்....
தூதுவளை பழத்தினை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டுவர நெஞ்சில் கட்டிக்கொண்டு வெளியேற மறுக்கும் கெட்டிப்பட்ட சளி கரையும். இருமல், இரைப்பு தீரும்... 👌👌👌
தூதுவளை இலைகளோடு துளசி மற்றும் மிளகு போட்டு கஷாயம் செய்து அருந்திவர இருமல் இரைப்பு அணுகாது.....
தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு வர புற்றுநோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்....
தொண்டைப்புற்று, கருப்பைபுற்று, வாய்ப்புற்று சார்ந்த புற்றுகளில் நல்ல பலன் கொடுத்துள்ளதையும் இந்த ஆய்வுகள் உறுதிசெய்கிறது...... 👍👍👍👍👍
தூதுவளையில் நிறைந்திருக்கும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு சத்தினால் உடலில் உள்ள எலும்புகளுக்கும், பற்களுக்கும் வன்மை கொடுக்கும்....குறிப்பாக கால்சியம் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் பல்வேறு வாதநோய்களுக்கு நல்ல பலன்கொடுக்கும்.... 💪💪💪💪
தூதுவளை கீரையை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலுக்கு வலிமைகொடுப்பதோடு ஆண்மை பலத்தினையும் கூட்டும்....
மேலும் தூதுவளை பூக்களை நெய்யில் வதக்கி பாலில் போட்டு கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலை இரவு என தொடர்ந்து பருகிவர விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டும்.... 👍👍
எளிதில் நம்முடைய வீடுகளின் அருகிலே கிடைக்கும் மகத்துவம் பொருந்திய மூலிகைகளை பயன்படுத்தி நோயில்லா ஆரோக்கிய நல்வாழ்வு வாழ்வோம்.... 🙏🙏🙏🙏🙏🙏
Dr.K.Rajkumar.M.D(Siddha).,
சித்த மருத்துவர்.,
சென்னை...

Follow us in Youtube, Telegram, Facebook

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஆடாதோடையின் நற்குணங்களும் பயன்களும்

 

ஆடாதோடையின் நற்குணங்களும் பயன்களும்

கொரோனா நோய்த்தொற்று போன்ற இந்த இக்கட்டான காலச்சூழலில், சாதாரண தொண்டைக்கட்டு , தொண்டைவலி அல்லது சாதாரண இருமல் ஏற்பட்டாலும் ஏதேதோ எண்ணங்களும், குழப்பங்களும் நமக்குள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்...... இப்படி ஏற்படும் சாதாரணமான சில அசௌகரியங்களை தீர்ப்பதில் முதன்மையாக இருப்பது நம்முடைய பாரம்பரியமான வீட்டுவைத்தியமுறைகளே....

நம் வீடுகளிலேயே உள்ள சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, இஞ்சி, கண்டங்கத்திரி, தூதுவளை,ஆடாதோடை போன்ற எண்ணற்ற மூலிகைகளை கொண்டே பரிகாரம் மேற்கொள்ளலாம்.....
அதிலும் குறிப்பாக வேலிகளில் சுயம்புவாக முளைத்து நிற்கும் அற்புதமான ஆடாதோடையின் நற்குணங்களை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.....
*ஆடாதொடையினாலே பாடாத நாவும் பாடும்*
என்கிறது சித்தமருத்துவம்.....
இதன் மூலமே கபம் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும், தொண்டைவலி, தொண்டைக்கட்டு போன்று பல்வேறு பிணிகளுக்கும் இது நல்ல தீர்வினை தரும் என்பதில் ஐயமில்லை.....
சளி, இருமல், இரைப்பிருமல் எனப்படும் இரைப்புநோய்க்கு (Bronchial Asthma) செய்யப்படும் பல்வேறு சித்த, ஆயுர்வேத மருந்துகளில் இதற்கென்று தனிஇடம் உண்டு.....
ஆடாதோடை இலையை இடித்து சாறுஎடுத்து, 10-20துளிகளை நேரடியாகவோ அல்லது சமனளவு தேன் கூட்டி கலந்துகொடுக்க இருமலும், இருமலோடு கூடிய இரைப்பும் (wheezing)., உடனடியாக தீரும்..... 👍👍👍👍👍
இரவு முழுக்க விடாமல் சிறுபிள்ளைகளை வாட்டி வதைக்கும் இருமலுக்கு, இரண்டு மூன்று ஆடாதோடை இலைகளை ஒன்றிடண்டாக நறுக்கி போட்டு, இரண்டு ஏலக்காய் போட்டு, இரண்டு குவளை வெந்நீரில் ஒரு 1மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி, 15ml-30ml வரை சிறிது சிறிதாக கஷாயத்தை கொடுத்து வர சளியானது இளகி வெளியேறி இருமலும் நிற்கும் 👍👍👍👍👍
சிலருக்கு வயிற்றுஉப்புசத்துடன் இரைப்பு (wheezing ) ஏற்படும்... கூடவே சுரமும், சளியும் இருக்கும் நிலையில்., 5 ஆடாதோடை இலைகளை ஒன்றிடண்டாக நறுக்கிப்போட்டு, 10-15மிளகு இடித்து போட்டு, ஒரு குவளை நீரில் ஊறவைத்து கொதிக்க வைத்து 30ml -60ml வரை கஷாயத்தை குடித்துவர, உப்புசமும் இரைப்பும் உடனடியாக நீங்கும்...... 👌👌👌👌👌👌👌
சளி கட்டிக்கொண்டு, குரற்கம்மலாக கரகரப்புடன் இருக்கும்போது ஆடாதோடை இலை, அதிமதுர துண்டு, நான்கு மிளகு கூட்டி கஷாயமாக வைத்து குடித்துவர தொண்டைகரகரப்பு நீங்கி, இயல்பான குரல் ஒலி மீட்டெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.... 👏👏👏👏
ஆடாதொடையில் vasicine என்னும் சத்து தான் இதனுடைய அத்தனை மகத்துவத்திற்கும் காரணமாக உள்ளது...... இந்த vasicine சத்தில் இருந்துதான் இன்றைய நவீன மருத்துவம்
mucolytic செய்கைக்காக, Bromhexine என்னும் மருந்தை பிரித்துஎடுத்து, குழந்தைகளுக்கான சளி, இருமல் மருந்தை தயாரிக்கிறது என்பது பாரம்பரியமான நம் மூலிகை மருத்துவத்திற்கு மிகவும் பெருமையான ஒரு விஷயம்..... 💪💪💪💪💪
இப்பேற்பட்ட மருத்துவகுணங்களை கொண்ட மூலிகைகளின் மகத்துவத்தினை உலகமே வியந்துபார்ப்பதோடு மட்டுமல்லாமல்,
பயன்படுத்தி வரும் இன்றைய சூழலில், இந்த மருத்துவ முறைகள் தோன்றிய இந்த புண்ணிய பூமியில் இதற்கான அங்கீகாரம் இன்றளவும் கிடைக்கவில்லை என்பதே ஒரு வருத்தமான சங்கதி...... 😥😥
Dr.K.Rajkumar.M.D(Siddha).,
சித்த மருத்துவர்., சென்னை.

Follow us in Youtube, Telegram, Facebook